உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓடும் பஸ்சில் கஞ்சா சுருட்டிய வாலிபர்

ஓடும் பஸ்சில் கஞ்சா சுருட்டிய வாலிபர்

ராமநத்தம், : கடலுார் மாவட்டம், ராமநத்தம் -கொரக்கவாடி வரை தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது. இதில், கிராம மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். நேற்று முன்தினம், இந்த மினி பஸ் ராமநத்தத்தில் இருந்து கொரக்கவாடிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பஸ் படிக்கட்டில் அமர்ந்து கையில் கஞ்சாவை கசக்கி, சுருட்டி கொண்டிருந்தார். இதனை, பஸ்சில் பயணித்த மற்றொரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவுகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ