மேலும் செய்திகள்
காணும் பொங்கல் விழா கோவில்களில் வழிபாடு
17-Jan-2025
விருத்தாசலம் : தை அமாவாசையொட்டி, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரர் சுவாமியை வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், காசியை விட வீசம பெருசு விருத்தகாசி என்ற ஆன்மிக பெயரும் உண்டு. இதனால், தை அமாவாசையொட்டி நேற்று அதிகாலை முதல் ஏராளமானோர் மணிமுக்தாற்றில் நீராடி, சித்தி விநாயகர் கோவில் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர், விருத்தகிரீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்தனர்.மேலும், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பசு மடத்தில் அகத்திக்கீரையை தானமாக வழங்கி வழிபட்டனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
17-Jan-2025