உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர் சேர்க்கை ஊர்வலம்

மாணவர் சேர்க்கை ஊர்வலம்

கிள்ளை, : பரங்கிப்பேட்டை ஒன்றியம், கோவிலாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2024- 2025ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது.பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கி, மாணவர் சேர்க்கை ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பாக்கியலெட்சுமி, வார்டு உறுப்பினர் ஜெயச்சித்ரா முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி, முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.ஊர்வலத்தில், ஆசிரியர்கள் பீனா, சிதம்பரம், பாமா, சுமதி, சிவகுமார், ஐயம்மாள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி