உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் கிராமத்தில் பயிற்சி

வேளாண் மாணவிகள் கிராமத்தில் பயிற்சி

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அருகில் வேளாண் மாணவிகள் இயற்கை விவசாயத்தின் மகத்துவம் பற்றி பயிற்சி பெற்றனர். பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள், 9 பேர் கொண்ட குழுவினர், குறிஞ்சிப்பாடி அடுத்த குருவப்பன்பேட்டை கிராமத்தில் வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தின் மகத்துவம் பற்றியும், இயற்கை உரத்தின் தனித்துவம் பற்றியும் இயற்கை விவசாயி சிவராம சேது விளக்கிக் கூறினார். ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயி வேல்முருகன் உள்ளிட்டோர் மாணவிகளுக்கு பயிற்றுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !