உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை பூஜை

மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை பூஜை

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பூஜையையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, குழந்தை சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மகா பூர்ணாஹூதி நடந்து, கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது. 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி