ஆனந்தபவன் ஓட்டல் வெள்ள நிவாரணம் வழங்கல்
கடலுார்: வெள்ளம் பாதித்த மக்களுக்கு கடலுார் ஆனந்தபவன் ஓட்டல் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நத்தப்பட்டு கிராமத்தில் 300 நபர்களுக்கு, கடலுார் ஆனந்தபவன் ஓட்டல் உரிமையாளர் ராம்கிநாராயணன் பால், பிரட் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.இதேபோன்று, உச்சிமேட்டில் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.