அண்ணாமலை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம்: மழை முன்னெச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பதிவாளர் பிரகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கன மழை மற்றும் புயுல் முன்னெச்சரிக்கை காரணமாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை ஒட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளான கடலுார், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளில் இன்று (29ம் தேதி) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.