உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலுார், : மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இதில், 9 வயதிற்குட்பட்ட சிறுவர் பிரிவில் ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி மாணவர் தமிழ்செல்வம் முதலிடத்தையும், வருணேஷ் இரண்டாமிடத்தையும், 17 வயதிற்குட்பட்ட சிறுமியர் பிரிவில் ஷர்மி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று பரிசுகள் வென்றனர். இந்த மாணவர்கள் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் நடத்தும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை செஸ் அகாடமி நிறுவனர் பாஸ்கர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ