விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலுார்:நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.சி., பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் தலைமை தாங்கினர். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, சைபர் கிரைம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சைபர் கிரைம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.