உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே மாணவர்களுக்கு பெல்ட் வழங்கல் 

கராத்தே மாணவர்களுக்கு பெல்ட் வழங்கல் 

சேத்தியாத்தோப்பு: வடலுார் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டிராகன்ரியூ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் தலைமை தாங்கினர். கராத்தே பயிற்றுநர்கள் ஜெயவேல், கலைச் செல்வன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை தீபா வரவேற்றார். விழாவில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கி பாராட்டினர். மாணவர்கள் கராத்தே செய்து காண்பித்தனர். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி