உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதில், சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.அதில், அவர் விருத்தாசலம் சித்தலுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலு, 28, என்பதும், கடந்தாண்டு ஜூலை மாதம் 25ம் தேதி, விருத்தாசலம் மக்கள் மருந்தகம் முன்பு நிறுத்திஇருந்த பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பாலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி