உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பா.ஜ., நிர்வாகி மீது  விதி மீறல் வழக்கு

 பா.ஜ., நிர்வாகி மீது  விதி மீறல் வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடத்தை விதி மீறியதாக பா.ஜ., நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விருத்தாசலம் பா.ஜ., இளைஞரணி தலைவர் சரவணன், 32; இவர், நேற்று காலை பா.ம.க., வேட்பாளரை வரவேற்று, உளுந்துார்பேட்டையில் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தார். இதையடுத்து, சரவணன் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை