புத்தக கண்காட்சி இன்று துவக்கம்
கடலுார்; கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று (22ம் தேதி) காலை 10:00 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி துவங்குகிறது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் சிறப்புரையாற்றுகின்றனர். சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், உள்ளூர் படைப்பாளிகளின் சொற்பொழிவுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறுவர் விளையாட்டு திடல் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.