உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு பிராமணர் சங்கம் பரிசு

பள்ளி மாணவர்களுக்கு பிராமணர் சங்கம் பரிசு

கடலுார்:கடலுாரில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மஞ்சக்குப்பம் கிளை சார்பில், சுதந்திர போராட்ட தலைவர்கள் குறித்த ஓவியம், பேச்சுப்போட்டி நடந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இப்போட்டிக்கு சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, ஓவியம், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். சங்க பொதுச்செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார். ஆசிரியை கலைச்செல்வி வாழ்த்திப் பேசினார். ஆசிரியர் மனோகரன் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தார். மாணவி சர்மிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ