உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலத் தகராறில் மோதல் 6 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது

நிலத் தகராறில் மோதல் 6 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது

மங்கலம்பேட்டை, : மங்கலம்பேட்டை அருகே நிலத்தகராறில் தாக்கி கொண்ட இருதரப்பை சேர்த்த 6 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார் இருவரை கைது செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த விசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அருணாசலம், 35. இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன், 36, என்பவரிடம் நிலம் விற்றார். இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன் விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அருணாசலத்தின் மனைவி முத்துலட்சுமியை, மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.அதேபோல், மணிகண்டனை, அருணாச்சலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இருதரப்பு புகார்களின் பேரில், 6 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டன், சீனு ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ