மேலும் செய்திகள்
புத்தேரி கோவிலில் அமாவாசை வழிபாடு
23-Aug-2025
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது. நேற்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி ஆகியவைகளால் அபிேஷகம், 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. வெற்றி விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகி ருஷ்ணன் செய்திருந்தனர்.
23-Aug-2025