உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : நெய்வேலியில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருஅரசு, பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், சந்திரன், குமார், முருகன், வேலாயுதம், சாமுவேல், சம்பத், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.என்.எல்.சி.,யில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய ரகசிய ஓட்டெடுப்பை விரைவில் நடத்த வேண்டும். ஏற்கனவே அங்கீகாரம் பெற்றிருந்த சங்கங்களின் பதவிக்காலம் காலாவதியாகி விட்டது. எனவே, இனிவரும் காலங்களில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

லிங்கம், கோவை
ஏப் 07, 2025 04:58

அருமையான பேச்சு... சீமானுக்கு பாராட்டுக்கள்... அறநிலைத்துறையை அரசாங்கம் தனியார் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்து மக்களும் சுரணை அற்றவர்களாக இருப்பதை விடுத்து பெரும் போராட்டம் கையில் எடுக்க வேண்டும்.


முக்கிய வீடியோ