உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்:கடலுாரில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.கடலுார் டவுன் ஹாலில் இருந்து அண்ணா பாலம் வரை கல்லுாரி மாணவர்கள் நுகர்வை குறைப்போம், நுகர்வோர் உரிமையை அறிந்திடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி