மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
28-Nov-2024
கடலுார்: கடலுார், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதையொட்டி பண்ருட்டி, அண்ணாகிராமம், மற்றும் கடலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று (4ம் தேதி) விடுமுறை விடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Nov-2024