மாவட்ட மாநாடு
கடலுார்; கடலுாரில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயற்குழு சம்பந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டியராஜன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜீவானந்தம், தொழிற்சங்க மாநில செயலாளர் சேக்கிழார், இளைஞர் முன்னணி மாநில செயலாளர் வெங்கடேசன் பேசினர். கடலுார் சட்டசபை தொகுதிக்குள் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ராஜாராமன் நன்றி கூறினார்.