தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
கடலுார்: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நேற்று கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், புகழேந்தி, தே.மு.தி.க., சிவக்கொழுந்து, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.