உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் குறைகேட்பு மழையால் ஒத்திவைப்பு

விவசாயிகள் குறைகேட்பு மழையால் ஒத்திவைப்பு

கடலுார்: கடலுாரில் இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று (29ம் தேதி) கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ