உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் தற்கொலை மாமனார், மாமியார் கைது

பெண் தற்கொலை மாமனார், மாமியார் கைது

காட்டுமன்னார்கோவில்: கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரைச் சேர்ந்த செங்குட்டுவன் --- பானுமதி தம்பதி மகன் கயல்வேந்தன், 35; அந்தமானில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இவருக்கு, கயல்விழி, 29, என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கயல்வேந்தன் அந்தமானில் வேலை செய்வதால், மாமனார், மாமியாருடன் வசித்தார்.கயல்விழியிடம் வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் கொடுமைபடுத்தியுள்ளனர். கணவரிடம் கூறியும் அவர் கண்டுக்கொள்ளவில்லை.மனமுடைந்த கயல்விழி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சு மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.காட்டுமன்னார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கயல்விழியின் பெற்றோர், உறவினர்கள், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை முன் திரண்டு, கயல்விழி மாமியார், மாமனாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேச்சு நடத்தினர்.கயல்விழி தாய் மகாலட்சுமி புகாரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் செங்குட்டுவன், பானுமதி, கயல்வேந்தன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், செங்குட்டுவன், பானுமதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை