மேலும் செய்திகள்
குட்கா பொருட்கள் விற்றவர் கைது
28-Dec-2024
கடலுார், : கடலுார் அருகே மீன்பிடி படகிற்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.கடலுார் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் உதயன், 43; மீனவர். இவர், கடலுார் முதுநகரில் மீன்பிடி படகிற்கு தேவையான உதிரி பாகங்கள் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இரவு 10:50 மணியளவில், அவரது கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
28-Dec-2024