கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
சேத்தியாத்தோப்பு:' ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை , அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது.முகாமிற்கு, ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, ஆசிரியர்கள் அருணா, செல்வி முன்னிலை வகித்தனர். சக்திவேல் வரவேற்றார்.புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம், கண் மருத்துவர்கள் மீனா, நித்யா, மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்றர்களின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். 50 நபர்களுக்கு அறக்கட்டளை சார்பில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 100 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அறக்கட்டளை அறங்காவலர் ராணிஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.