உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

கடலுார்: கடலுாரில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் மணிகண்டன். இவர், கடந்த 2017ம் ஆண்டு மரக்காணம், சம்புவெளி ஈ.சி.ஆர்.,சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டன் மனைவி லதா இழப்பீடு கோரி, கடலுார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் குடும்பத்திற்கு 21 லட்சத்து 90 ஆயிரத்து 800 ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், இழப்பீடு தொகை வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித் த நீதிபதி சரஸ்வதி, வட்டியுடன் சேர்த்து 34 லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாயை வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் இழப்பீடு வழங்காததால் நீதிபதி உத்தரவின்படி, கோர்ட் ஊழியர்கள் நேற்று கடலுார் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி