உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணைத் தலைவர் ஞானஜோதி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் இருதயராஜ் வரவேற்றார். செயலாளர் தேவராஜ், நிர்வாகிகள் தெய்வசிகாமணி, தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, முன்னாள் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, கந்தன், பரமசிவம், விவேகானந்தன் கண்டன உரையாற்றினர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ