உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா, 40; ஆட்டோ டிரைவர். இவரது, மனைவி பத்மபிரியா, 30; இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால்,குடும்பத்தில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், சிவா கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து, பத்மபிரியா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து,சிவாவை தேடிவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ