இந்திராணி டிராக்டர்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
கடலுார்: கடலுார் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகில், இந்திராணி டிராக்டர்ஸ் விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.மயிலம் தொகுதி எம்.எல்.எ., சிவக்குமார் குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக மூத்த துணைத்தலைவர் குப்தா, விற்பனை பிரிவு ஜோனல் தலைவர் வெங்கடேஷ், புதுச்சேரி பரோடா வங்கி மண்டல தலைமை மேலாளர் ரவி, சாய்பாபு, கடலுார் பரோடா வங்கி அனுராதா, சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை குமாரமுருகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் தாமரைக்கண்ணன், பொறியாளர்கள் பாலமுருகன், பிரகாஷ், இந்திராணி பழமலை குடும்பத்தினர் செய்திருந்தனர். முத்துக்குமரன் நன்றி கூறினார்.