மேலும் செய்திகள்
கிள்ளை பேரூராட்சி கூட்டம்
09-May-2025
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி சாதாரண மன்ற கூட்டம் நேற்று நடந்தது.சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பெலிக்ஸ், செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. எஸ்.பி.டி.எஸ்., நகரில் தார் சாலை அமைப்பது. பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.
09-May-2025