உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாந்த ஆஞ்சநேயருக்கு இன்று கும்பாபிேஷகம்

சாந்த ஆஞ்சநேயருக்கு இன்று கும்பாபிேஷகம்

கடலுார்,: கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை அக்னி ப்ரணயனம் நித்ய ஹோமம், வேத ப்ரபந்த சாற்றுமுறை, மாலை அதிவாசத்ரயம் ஹோமம், மகா சாந்தி சப்த திரவ்ய ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனமும், மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று (8ம் தேதி) காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், புண்யாக வாசனம், ததுக்த ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. பின் கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மேல் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாந்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி