உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கங்கையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கங்கையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கடலுார்; நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரம் கங்கையம்மன் கோவிலில் நாளை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.நெல்லிக்குப்பம் அடுத்த திருவடுகூர் என்கிற திருக்கண்டீஸ்வரம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (5ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நாளை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மஹா தீபாராதனைக்குப்பின் கலசம் புறப்பாடு நடக்கிறது. 8.50மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் மகா அபிஷேகம், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி