மேலும் செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
20-Dec-2025
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூலவர்கள் விநாயகர், ராஜராஜேஸ்வரர் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் உற்சவர் நர்த்தன விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நர்த்தன விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் நடனம் ஆடியபடி ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
20-Dec-2025