உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது தம்பி வீரசுந்தரம்,32; சென்ட்ரிங் கூலி தொழிலாளி. இருவருக்கும் வீட்டுமனை பிரச்னை உள்ளது. வீரசுந்தரம் கடந்த 22ம் தேதி வையாபுரிபட்டினம் பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்தார்.அங்கு வந்த வீரப்பன் தனது நண்பர்கள் 3 பேருடன் மதுபோதையில் இரும்பு ராடால் வீரசுந்தரத்தை தாக்கினார். இதில், காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து வீரசுந்தரம் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தங்கமணி என்பரை கைது செய்து, வீரப்பன், திருவள்ளுவர் நகர் சேர்ந்த சண்முகம் மகன் கண்ணதாசன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை