உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

நெல்லிக்குப்பம்: புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே மொபட்டில் வந்தவரை நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றதால் துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தனர். இதில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு பத்மநாபன், 46; என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை