அமைச்சு பணியாளர்கள் கிளை சங்க தேர்தல்
கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் கிளை சங்க தேர்தல் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலராக வடிவேலு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஜெகநாதன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் பதவிக்கு என தலா 2 பேர் வீதம், 10 பேர் போட்டியிட்டனர். இதில், 115 பேர் கலந்து கொண்டு ஓட்டுப்பதிவு செய்தனர். இந்த தேர்தல் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடந்தது.