தேசிய நெசவாளர் தினம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அஞ்சல் கோட்டம் சார்பில் தேசிய நெசவாளர் தின விழா கொண்டாடப்பட்டது. கண்டப்பங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கைத்தறி நெசவாளர்களுக்கு சால்வை அணிவித்து, கவுரவிக்கப்பட்டனர். மேலும், ஆதார் சிறப்பு முகாம் நடத்தி புதிய கார்டு பெற கைரேகை பதிவு, மொபைல் எண் இணைத்தல் மற்றும் இடமாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்பட்டது. அஞ்சல் ஊழியர்கள், கைத்தறி நெசவாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.