கடலுார் அழகப்பா நகை மாளிகையில் தலை தீபாவளிக்கு புதிய டிசைன்கள்
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அழகப்பா நகை மாளிகை.இதுகுறித்து கடை உரிமையாளர் அழகப்பா மணி கூறியதாவது: கடந்த 56 ஆண்டுகளாக மக்கள் சேவையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனை செய்கிறோம். நிறைந்த தரம், குறைந்த விலை, கண்களை கவரும் எண்ணிலடங்கா டிசைன்கள், அதிக வியாபாரம் என்பதே குறிக்கோள். அழகப்பா நகை மாளிகையின் மற்றொரு கிளையானது எண்.29, சுப்ராய செட்டித் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலுார் என்ற முகவரியில் உள்ளது. இது நெஞ்சை அள்ளும் அழகிய நகைகளின் ஆலயமாக திகழ்கிறது. இங்கு, அனைத்து நகைகளும் 916 பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளுக்கு புதிய டிசைன்கள் நியாயமான சேதாரத்தில் எப்போதும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடலுார் சுப்ரீம் அரிமா சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்து அரசுப் பள்ளிகள், மனவளர்ச்சி குன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். எனது மனைவி கவிதா மணி, சுப்ரீம் அரிமா சங்கம் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனது மகன்கள் அஸ்வின், அசோக் ஆகியோரும் நகை விற்பனை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் மெயின்ரோடு, கே.என்.,பேட்டையில் நவீன வசதிகளுடன் அழகப்பா திருமண மண்டபம் குறைந்த வாடகையில் இயங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.