உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

 துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

திட்டக்குடி: துணை ராணுவப்படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து, கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். சட்டசபை தேர்தலையொட்டி பொதுமக்களிடம் அச்சத்தை போக்கி, 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று, திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் வதிஷ்டபுரம், திட்டக்குடி - விருத்தாசலம்; திட்டக்குடி - ராமநத்தம் நெடுஞ்சாலை, ஆவட்டி சாலை, தேரடி வீதி ஆகிய பகுதியில், 52 துணை ராணுவப்படை வீரர்களுடன், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். அப்போது, மேளதாளங்களுடன் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு, 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை