துணை ராணுவம் கொடி அணிவகுப்பு
கடலுார்: கடலுாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், மக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொகுதி தோறும் கொடி அணிவகுப்பு நடக்கிறது. நேற்று கடலுார் முதுநகரில் எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.