உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழைநீர் தேங்கி மக்கள் அவதி

மழைநீர் தேங்கி மக்கள் அவதி

கடலுார், : வடிகால் வசதியின்றி குடியிருப்பில் மழைநீர் தேங்குவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் வண்ணாரப்பாளையம் மரியசூசை நகர் முதல் தெருவில், ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தற்போது புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. நேற்று காலை அப்பகுதியில் பெய்த மழைநீர் வெளியேறாமல் வீதிகளில் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.எனவே, மரியசூசை நகர் முதல் தெருவில் வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !