தொழிலாளி மீது போக்சோ
கடலுார்: கடலுார் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டட தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் அபிநந்தன், 23; கட்டட தொழிலாளி. இவர் பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்தார். கடந்த ஜனவரி மாதம், அச்சிறுமியை திருமணம் செய்து அபிநந்தன் குடும்பம் நடத்தி வந்தார். அச்சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டார விரிவாக்க அலுவலர் ராஜரீகமேரி போலீசில் புகார் அளித்தார். கடலுார் அனைத்து மகளிர் போலீசார் அபிநந்தன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.