உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்

தலைமை ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கல்

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களில் எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த மாணவர்களில் பலர் எழுதவும், படிக்கவும் தெரியாமல் சிரமப்பட்டனர்.குறிப்பாக, கணிதம் பாடத்தில் பின்தங்கி இருந்தனர். இதுபோன்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தேவநாதன் சிறப்பு வகுப்புகள் நடத்தி எழுதவும், படிக்கவும், அடிப்படை கணித பாடங்களையும் கற்பித்தார். இதனையொட்டி அவரை பாராட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை