உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க கோரி மறியல்

ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க கோரி மறியல்

விருத்தாசலம் : சிமெண்ட் சாலை பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் கவுன்சிலரை கண்டித்து, நகராட்சி கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம், புதுக்குப்பம் மாணிக்கவாசகர் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக முன்னாள் கவுன்சிலர் குருசரஸ்வதி வீட்டின் எதிரில் திரிசூலத்துடன் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டையை அகற்ற வேண்டுமென, கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் அப்பகுதி மக்கள் கூறினர். இதற்கு குரு சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை 4:30 மணிக்கு விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இதனையேற்று பொதுமக்கள் 4:40 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !