உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 604 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் ஈமசடங்கு உதவித்தொகை 17 பயனாளிகளுக்கு தலா 17,000 வீதம் வழங்கினார். மேலும், 7 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ. 24,500 வீதம் 24 பயனாளிகளுக்கும் காசோலையை கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், துணை கலெக்டர்கள் தனலட்சுமி, ரமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி