மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் : 560 மனுக்கள் குவிந்தன
30-Sep-2025
குறைகேட்பு கூட்டத்தில் 612 மனுக்கள் குவிந்தன
23-Sep-2025
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். நேற்று நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 440 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு 1,08,000 ரூபாய் வீதம் 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 10,80,000 ரூபாய் மதிப்பீட்டிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Sep-2025
23-Sep-2025