உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: 553 மனுக்கள் மீது விசாரணை

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: 553 மனுக்கள் மீது விசாரணை

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 553 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று கடலுாரில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 553 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி