குயின்ஸ் பல்கலை மாணவர்கள் சர்வதேச நகர் ஆரோவில்லுக்கு வருகை
வானூர்; கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலை மாணவர்கள்குழு சர்வதேச நகரான ஆரோவில் வந்துள்ளனர்.கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் நகர்ப்புறத் திட்டமிடல் துறை பேராசிரியர் தலைமையிலான மாணவர் குழுவினர், ஆரோவில் வருகை தந்தனர். அவர்கள், மாத்ரி மந்திரை பார்த்த பிறகு இங்குள்ள அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வு மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்தனர். இக்குழுவினர், பேராசிரியர் அஜய் அகர்வாலின் வழிகாட்டுதலின் கீழ், இந்த குழு உள்ளூர் நிபுணர்களுடன் பணியாற்ற உள்ளனர். குறிப்பாக கட்டடக்கலை பயிற்சியாளர் லலித்திடம் கட்டட அனுபவத்தை பெறவுள்ளனர். அத்துடன் குயிலாப்பாளையம் கிராமத்தில் ஆரோவில்லின் முயற்சிகளின் சமூக தாக்கத்தை மதிப்பிடவுள்ளனர். இதன் மூலம் மனித ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சி என்ற நகரத்தின் ஒட்டுமொத்த பார்வையுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை அறிந்து கொள்வார்கள். இந்த குழு, மாறிவரும் சமூக- பொருளாதார நிலப்பரப்பைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற சமூகத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் தீவிரமாக கலந்துரையாடவுள்ளது. மேலும், 1971ம் ஆண்டு முதல் ஆரோவில்லியனாக இருக்கும் ஜெயாவுடன் அவர்கள் உரையாடினர். அதில், பெண்களின் மாறிவரும் பங்கையும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் உள்ள சவால்களையும் எடுத்துக்காட்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.