உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபத்தான மரத்தை  அகற்ற கோரிக்கை

ஆபத்தான மரத்தை  அகற்ற கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தேத்தாம்பட்டு கிராமத்தில் உள்ள பாலத்தின் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது மரம் முறிந்து சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி