மேலும் செய்திகள்
வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
01-Jan-2025
கடலுார் : கடலுார் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அமைப்பு சார்பில், வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.மாநில பொருளாளர் வரதராஜன், மாநில துணைத்தலைவர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினர்.இதில், 109 மாத டி.ஏ., உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்று பணப்பலன் வழங்க வேண்டும். பணி காலத்தில் இறந்த தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி கோஷம் எழுப்பினர்.
01-Jan-2025